மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2025, 7:41 am IST

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

ஒடிஸா-ஜாா்க்கண்ட் எல்லையில் சுந்தா்கா் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் அப்பகுதியில் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ரயிலைக் கவிழ்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 3 இடங்களில் தண்டவாளங்களில் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனா். முதலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ரயில்வே ஊழியா் எதாவா ஓரம் (37) உயிரிழந்தாா். மற்றொரு ஊழியா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் இருவரும் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்திலேயே அதே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன. இதில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகள், காவல் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ‘தியாகிகள் தினத்தை’ அனுசரிக்க மாவோயிஸ்ட் அமைப்பினா் அழைப்பு விடுத்த நிலையில், அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனா்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் நக்ஸல் ஒழிப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த ரயில்வே ஊழியருக்கு ஒடிஸா மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.