எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிலிருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் பதில்.

News image

கோப்புப் படம்

Updated On :2 டிசம்பர் 2025, 5:59 pm IST

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் திங்கள் கிழமை (டிச. 1) முதல் நடைபெற்று வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய், கருப்புப் பணம் மீட்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? இதே காலகட்டத்தில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''வருமான வரிச் சட்டம் 1961-ல் கருப்புப் பணம் என்ற சொல் இல்லை. வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளைக் கண்டறிவதை அல்லது கருப்புப் பணத்தை கருப்புப் பண தடுப்புச் சட்டம் 2015 வரையறை செய்கிறது.

2015 ஜூலை 1 முதல் கருப்புப் பண தடுப்புச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் ரூ. 4,164 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் மற்றும் சொத்துகள் தொடர்பான 684 ரகசிய தகவல்களை மத்திய அரசு பெற்றது. இதற்கு அபராதமாகவும் வரியாகவும் மொத்தமாக ரூ. 2,476 கோடி வசூலிக்கப்பட்டது.

2015 முதல் 2025 ஜூன் வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,087 மதிப்பீடுகள் வருமான வரித் துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அபராதம் மற்றும் வரி மதிப்பு ரூ. 40,564 கோடி'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்பது குறித்த ஆண்டு வாரியான எந்தவொரு தரவுகளும் இல்லை என்றும், வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணம் மீட்டு கொண்டுவரப்பட்டதற்கான தனிப்பட்ட தரவுகளும் இல்லை எனவும் அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Summary

No Official Estimate Of Black Money Taken Out Of India In Last 10 Years Govt Says

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.