கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிலிருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் பதில்.

News image
கோப்புப் படம்
Updated On :2 டிசம்பர் 2025, 12:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் திங்கள் கிழமை (டிச. 1) முதல் நடைபெற்று வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய், கருப்புப் பணம் மீட்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? இதே காலகட்டத்தில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''வருமான வரிச் சட்டம் 1961-ல் கருப்புப் பணம் என்ற சொல் இல்லை. வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளைக் கண்டறிவதை அல்லது கருப்புப் பணத்தை கருப்புப் பண தடுப்புச் சட்டம் 2015 வரையறை செய்கிறது.

2015 ஜூலை 1 முதல் கருப்புப் பண தடுப்புச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் ரூ. 4,164 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் மற்றும் சொத்துகள் தொடர்பான 684 ரகசிய தகவல்களை மத்திய அரசு பெற்றது. இதற்கு அபராதமாகவும் வரியாகவும் மொத்தமாக ரூ. 2,476 கோடி வசூலிக்கப்பட்டது.

2015 முதல் 2025 ஜூன் வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,087 மதிப்பீடுகள் வருமான வரித் துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அபராதம் மற்றும் வரி மதிப்பு ரூ. 40,564 கோடி'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்பது குறித்த ஆண்டு வாரியான எந்தவொரு தரவுகளும் இல்லை என்றும், வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணம் மீட்டு கொண்டுவரப்பட்டதற்கான தனிப்பட்ட தரவுகளும் இல்லை எனவும் அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

summary

No Official Estimate Of Black Money Taken Out Of India In Last 10 Years Govt Says

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.