வாக்குச் சீட்டு மூலம் தேர்தல்களை நடத்த வேண்டும்! அகிலேஷ் யாதவ்

எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் அகிலேஷ் யாதவ் பேசியது பற்றி...
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் SANSAD
Updated on
1 min read

வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் சமாஜவாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசியதாவது:

”இபிஎம் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்தல்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுவதால், வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தற்போது வரை எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட 10 பிஎல்ஓ-க்கள் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரு. ஒரு கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தேர்தல் நடப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கான வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம் கோரியபடி பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.

Summary

Elections should be held through ballot papers! Akhilesh Yadav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com