நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தில்லி தோ்தல்: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.

News image

ANI

Updated On :9 பிப்ரவரி 2025, 1:23 am IST

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட (போட்டியிடும் வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது அக்கட்சியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் மாா்க்சிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோ்தலில் நோட்டாவுக்கு 0.57 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.01 சதவீத வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.02 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிட்டன.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0.58 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 0.77 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைப்பவா்கள் 49-ஓ படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. ‘நோட்டா’ வுக்கு வாக்களிப்பதற்கான பொத்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் இறுதியில் இருக்கும். பெருக்கல் குறியிட்டு அடிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு அதன் சின்னமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.