சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

News image

காங்கிரஸ் கொடி - கோப்புப் படம்

Updated On :10 பிப்ரவரி 2025, 8:21 pm IST

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், அவர் முதல்வர் பதவியை நேற்று (பிப். 9) ராஜிநாமா செய்தார்.

மணிப்பூர் மக்களின் நலன் கருதி பதவியை ராஜிநாமா செய்வதாக பிரேன் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''மணிப்பூர் மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக அவரை ராஜிநாமா செய்யவைத்துள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தால், அதில் பாஜக ஆட்சி கவிழும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கணித்துவிட்டார். மணிப்பூரில் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவர பாஜகவிடம் உரிய திட்டம் உள்ளதாகத் தெரியவில்லை. மக்கள் நலனுக்கு மேலாக கட்சி நலனை முன்வைப்பது, பாஜகவின் டிஎன்ஏ-விலேயே உள்ளது'' என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றமும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பிரேன் சிங், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.