தொழிலதிபர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி மூடி மறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மோடி அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு குறித்து விவாதித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “இந்தியா ஜனநாயக நாடு. நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். அனைத்து இந்தியர்களும் என்னுடையவர் என நான் நம்புகிறேன்” என்றார்.
தொழிலதிபர் அதானியின் ஊழல் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இரு நாடுகளைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் காந்தி விமர்சனம்
அவரின் இந்த பதிலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், “உள்நாட்டில் கேள்வி கேட்டால் அமைதியாகிவிடுவார். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்.
பிரதமர் மோடிக்கு நண்பரின் பாக்கெட்டை நிரப்புவது ‘தேசத்தை கட்டியெழுப்புவது என்றால், ஊழல் செய்வதும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


