இந்தியாவுக்கு நிகரான அதிக வரியை அமெரிக்காவும் விதிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா விதிக்கும் வரிக்கு நிகரான வரியை நாங்களும் விதிப்போம் என்று டிரம்ப் அறிவிப்பு.
டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on
Updated on
1 min read

இந்தியா அதிகமான வரி வசூலிப்பதாகவும், இனி நிகரான வரியை அமெரிக்காவும் வசூலிக்கும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என்று அச்சுறுத்தி வருகின்றார். மேலும், வரி தொடர்பான பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை அமெரிக்காவும் விதிக்கும் வகையிலான அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அப்போது டிரம்ப் பேசியதாவது:

எதிரி நாடுகளைவிட நட்பு நாடுகள்தான் எங்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் பல சிறிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா அதிகளவிலான வரியை விதிக்கின்றது.

அதிக வரியின் காரணமாக ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடிவதில்லை. இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதேதான் டெஸ்லாவுக்கும் நடக்கிறது.

அதனால், பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை இனி அமெரிக்காவும் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com