இந்தியா அதிகமான வரி வசூலிப்பதாகவும், இனி நிகரான வரியை அமெரிக்காவும் வசூலிக்கும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என்று அச்சுறுத்தி வருகின்றார். மேலும், வரி தொடர்பான பல உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை அமெரிக்காவும் விதிக்கும் வகையிலான அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அப்போது டிரம்ப் பேசியதாவது:
எதிரி நாடுகளைவிட நட்பு நாடுகள்தான் எங்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் பல சிறிய நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியா அதிகளவிலான வரியை விதிக்கின்றது.
அதிக வரியின் காரணமாக ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடிவதில்லை. இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. இதேதான் டெஸ்லாவுக்கும் நடக்கிறது.
அதனால், பிற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை இனி அமெரிக்காவும் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத பரஸ்பர வரி: ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்
‘நரகக் குழிகள்’: இந்தியா குறித்த சா்ச்சைக்குரிய பதிவைப் பகிா்ந்த டிரம்ப்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



