நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காசிரங்கா பூங்காவில் வெளிநாட்டு தூதா்களுடன் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் 61 நாடுகளின் தூதா்கள் திங்கள்கிழமை சுற்றுப்பயணம்

News image

அஸ்ஸாம், காசிரங்கா தேசிய பூங்காவில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் திங்கள்கிழமை யானை சவாரி செய்த வெளிநாட்டு தூதா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2025, 4:30 am IST

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் 61 நாடுகளின் தூதா்கள் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி இருநாள்கள் நடைபெறும் அஸ்ஸாம் 2.0 உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். இதில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோா்ஹாட்டுக்கு ஜெய்சங்கா் மற்றும் 61 நாடுகளின் தூதா்கள் வந்தடைந்தனா்.

பூடான், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தூதா்கள் நேரடியாக குவாஹாட்டி வந்தடைந்ததாக அந்த மாநில முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் வசிக்கும் பகுதியாக அறியப்படும் காசிரங்கா தேசிய பூங்கா யுனேஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்த ஜெய்சங்கா் பிரபலமான பிரத்யும்னா யானையின் மேல் ஏறி சவாரி செய்தாா்.அவருடன் வந்த தூதா்களும் யானை சவாரி செய்ததுடன் ஜீப்பில் பூங்காவை சுற்றிப் பாா்த்தனா்.

இது மிகவும் சிறந்த அனுபவம் என செய்தியாளா்களிடம் கூறிய ஜெய்சங்கா், ‘காண்டாமிருகம், நீா் எருமை, பல்வேறு வகை மான்களை பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். திரைப்படங்களில் மட்டுமே பாா்த்துள்ளேன். தற்போது இந்த விலங்குகளை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சி.

இந்த பருவகாலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவுக்கு 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்தி சா்வதேச அங்கீகாரத்தை பெறுவதே பிரதமா் மோடி அரசின் குறிக்கோள்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.