மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா மகா கும்பமேளாவில் புனித நீராடினார்..

News image

பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா - impress

Updated On :25 பிப்ரவரி 2025, 4:34 pm IST

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா புனித நீராடினார்.

இஸ்லாமியர்களின் ஆன்மிக குருவான நபிகள் நாயகம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நுபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவலாக கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, கடந்த 2022-இல் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நுபர் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி மகா சிவராத்திரியான நாளை நிறைவடைகிறது. திரிவேணி சங்கமத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் வரை அனைவரும் புனித நீராடினர்.

45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடிச் சென்றதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.