கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

லூதியானா மேற்கு பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் பெயர் அறிவிப்பு..

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :26 பிப்ரவரி 2025, 6:27 am

DIN

 பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி சாா்பில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோல்வியடைந்து ஆட்சியை இழந்த பிறகு அக்கட்சி எதிா்கொள்ளும் முதல் தோ்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. இடைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே வேட்பாளரை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரோரா, லூதியானாவைச் சோ்ந்த தொழிலதிபா் ஆவாா். 2022-ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.

லூதியானா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த குா்பிரீத் பாசி கோகி கடந்த மாதம் அவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து அரோரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆம் ஆத்மி தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். லூதியானா மக்களுக்காக தொடா்ந்து அா்ப்பணிப்புடன் உழைப்பேன்’ என்று கூறியுள்ளாா்.

தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டதே பாஜக அமோக வெற்றி பெற காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா அல்லது ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி. ஆகிறாரா கேஜரிவால்?

பஞ்சாப் இடைத் தோ்தல் வேட்பாளராக சஞ்சீவ் அரோரா களமிறக்கப்பட்டுள்ளதால், அவரது மாநிலங்களை உறுப்பினா் பதவிக்கு தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கேஜரிவால் போட்டியிடுவாா் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சுக்பால் சிங் தெரிவித்தாா். எனினும், இதை ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடா்பாளா் மறுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.