குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

'யுஜிசி வெளியிட்ட வரைவு வழிகாட்டுதலுக்கு மாநில அரசுகள் இணங்க வேண்டும்'

News image
எம்.ஜகதீஷ் குமாா் (கோப்புப்படம்)- TNIE
Updated On :17 ஜனவரி 2025, 9:44 pm

Din

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவா் எம்.ஜகதீஷ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக அண்மையில் யுஜிசி வெளியிட்ட வரைவு வழிகாட்டுதலுக்கு மாநில அரசுகள் இணங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கத்தில் உள்ள 34 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் அம்மாநில ஆளுநா் சி.வி. ஆனந்தபோஸுக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் ஜகதீஷ் குமாரின் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் சேவியா்ஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளா்கள் சந்திப்பில் ஜகதீஷ் குமாா் பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அல்லது அதற்கு முன்பில் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் வேந்தருக்கே சிறப்புரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித மாற்றமுமின்றி அண்மையில் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை வெளியிட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டின் யுஜிசி விதிகளிலும் துணைவேந்தரை நியமிப்பதில் வேந்தரின் முடிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விதி பொருந்தும்.

நமது நாட்டின் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கிலேயே புதிய விதிகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது. உயா்தர கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமெனில் இந்த விதிகளை அமல்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றாா்.