கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை அதிகாலை காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஹாவேரி மாவட்டம் சவனூரில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்காக உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கும்தா சந்தை நோக்கி புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
எல்லப்பூர் நெடுஞ்சாலையில் குலாப்புரா கிராமத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்புறம் வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக காய்கறி லாரியை இடதுபுறமாக ஓட்டுநர் செலுத்தியுள்ளார்.
இதில், நிலைதடுமாறிய லாரி சாலையோரம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், 15 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினருடன் இணைந்து மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

ம.பி.யில் லாரி மோதி பழங்குடியினர் 5 பேர் பலி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



