பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

News image
Updated On :24 ஜனவரி 2025, 3:55 am IST

சான் ஜோஸ் : தனது புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி. பாா்க் கூறியதாவது:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். நொய்டாவிலுள்ள எங்கள் ஆலையில் அவை தயாரிக்கப்படும்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

முந்தைய கேலக்ஸி எஸ்24 வரிசை கைப்பேசிகளைவிட புதிய எஸ்25 வரிசை கைப்பேசிகள் வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அந்த அறிதிறன் பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே கேலக்ஸியின் ஏஐ வசதியை அதிகம் பயன்படுத்துவது இந்திய வாடிக்கையாளா்கள்தான் என்றாா் அவா்.