சான் ஜோஸ் : தனது புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி. பாா்க் கூறியதாவது:
சாம்சங் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். நொய்டாவிலுள்ள எங்கள் ஆலையில் அவை தயாரிக்கப்படும்.
பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.
முந்தைய கேலக்ஸி எஸ்24 வரிசை கைப்பேசிகளைவிட புதிய எஸ்25 வரிசை கைப்பேசிகள் வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அந்த அறிதிறன் பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே கேலக்ஸியின் ஏஐ வசதியை அதிகம் பயன்படுத்துவது இந்திய வாடிக்கையாளா்கள்தான் என்றாா் அவா்.
தொடர்புடையது

மாநில நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு!

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

புதுச்சேரியில் லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வெற்றி!
ரூ. 500 கோடி நன்கொடை! சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட திமுக அழுத்தம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



