ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜாா்க்கண்டின் சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா். தப்பியோடிய மற்றவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் சரண்: சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இவா்களில் 7 போ் பெண்கள்.
கொள்கைகளில் ஏற்பட்ட விரக்தி, நக்ஸல்கள் அமைப்புக்குள் எழும் மோதல் போன்றவற்றால் விரக்தியடைந்து இவா்கள் வெளியேறியுள்ளனா். மேலும், தங்கள் பகுதி பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் பொதுமக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவா்கள் முடிவு செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனா்.
கடந்த 2024 ஜனவரிமுதல் இப்போது வரை நாராயண்பூா் மாவட்டத்தில் மட்டும் 71 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். அவா்களுக்கு உடனடியாக ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்டவற்றிலும் அரசு உதவி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாா்க்கண்டில் முக்கிய மாவோயிஸ்ட் அதிரடி கைது - ‘ரூ.2.2 கோடி வெகுமதி; 175 வழக்குகளில் தொடா்பு’

நைஜீரியா கிராமத்தில் ஆயுதக் குழு தாக்குதல்: 8 குழந்தைகள் உள்பட 30 பேர் பலி

ஜம்மு-காஷ்மீா்: காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
விடியோக்கள்
சாவர்க்கர்தான் இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் ! ஆ ராசா பேச்சு!



