தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வதோதராவில் புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி !

வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.

News image
வதோதரா பாலம்.
Updated On :14 ஜூலை 2025, 4:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.

குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி கடந்த 9ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.

பல அடி உயரம் வரையிலான அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தேசிய-மாநிலப் பேரிடா் மீட்புப் படையினருடன் உள்ளூா் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 11 பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. தற்போது இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் பூபேந்திர படேல், 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முஜ்புர் அருகே புதிய பாலம் கட்டுவதற்கு முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தார். புதிய பாலத்தை 18 மாதங்களில் கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் டெண்டர் செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டம் தொடர்பான பணிகளுக்காக ரூ.212 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

summary

Days after the Mahisagar river bridge collapse tragedy in Vadodara district, the Gujarat government has approved the construction of a parallel two-lane bridge and approved Rs 212 crore for the project-related work.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.