பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளதாக, அம்மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் இன்று (ஜூலை 17) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக நலந்தா மாவட்டத்தில் 5 பேரும், வைஷாலியில் 4 பேரும், பாங்கா மற்றும் பாட்னா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளனர்.
இத்துடன், ஷேயிக்புரா, நவடா, ஜெஹானாபாட், அவூரங்காபாத், ஜாமுயி மற்றும் சமாஸ்டிபூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒருவர் பலியாகியது பதிவாகியுள்ளது. இதையடுத்து, மோசமான வானிலைகளின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தனது இரங்கல்களைத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Summary
It is reported that 19 people have been killed by lightning in Bihar in the last 24 hours alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


