ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது குறித்து...

News image

அக்னி ஏவுகணை

ENS

Updated On :17 ஜூலை 2025, 4:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 ஆகிய ஏவுகணைகளின் சோதனைகள் இன்று (ஜூலை 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி - 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட சில மணி நேரம் கழித்து, பிருத்வி ஏவுகணை சந்திப்பூரிலுள்ள ஐடிஆரின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

India has reportedly successfully test-fired its Prithvi-2 and Agni-1 missiles in the Odisha coast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.