ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது குறித்து...

News image

அக்னி ஏவுகணை - ENS

Updated On :17 ஜூலை 2025, 10:14 pm IST

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் (ஐடிஆர்), குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 ஆகிய ஏவுகணைகளின் சோதனைகள் இன்று (ஜூலை 17) வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சோதனைகளின் மூலம் ஏவுகணைகளின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அளவுகளைச் சரிபார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளில், முதலில் அக்னி - 1 ஏவுகணை அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட சில மணி நேரம் கழித்து, பிருத்வி ஏவுகணை சந்திப்பூரிலுள்ள ஐடிஆரின் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

India has reportedly successfully test-fired its Prithvi-2 and Agni-1 missiles in the Odisha coast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.