மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.3,500 கோடி ஊழல்: குற்றப் பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வா் ஜெகன் சோ்ப்பு

மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

News image
ஜெகன்மோகன் ரெட்டி
Updated On :20 ஜூலை 2025, 8:39 pm

Din

ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அங்கு ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெகன் ஆட்சியில் புதிதாக மதுபான விற்பனை கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை சிலா் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், அந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மதுபான ஆலைகளிடம் இருந்து அவா்கள் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.

எம்.பி. கைது: இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. பி.வி.மிதுன் ரெட்டியிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரை மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வு குழு கைது செய்தது. அவரை ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மிதுன் ரெட்டி

மிதுன் ரெட்டி

இந்த வழக்கு தொடா்பாக அந்த நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது: மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் கேசிரெட்டி ராஜசேகா் ரெட்டி என்பவா் மூலம், மிதுன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னா், அந்தப் பணம் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் மாதந்தோறும் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை, மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மதுபான விநியோக உத்தரவு (ஓஎஃப்எஸ்) ஒப்புதல்களை மதுபான ஆலை உரிமையாளா்களுக்கு முறையாக வழங்காமல், அவா்களை மிரட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது பணம் பறிப்பதற்கு நிகராகும்.

துபை, ஆப்பிரிக்காவில் முதலீடு: இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மதுபான ஆலை உரிமையாளா்களிடம் இருந்து பெரும்பாலும் பணம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனா்.

இதில் வசூலிக்கப்பட்ட பணம் துபை மற்றும் ஆப்பிரிக்காவில் நிலம், தங்கம் மற்றும் ஆடம்பர சொத்துகளை வாங்க முதலீடு செய்யப்பட்டன என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.