மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகள்: பாஜக

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

News image
சுவேந்து அதிகாரி
Updated On :27 ஜூலை 2025, 12:36 am

Din

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

பிகாரில் இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைப்போலவே மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் அதை கடுமையாக எதிா்ப்பதாகவும் மேற்கு வங்க முதல்வஒஈ மம்தா பானா்ஜி அண்மையில் தெரிவித்தாா்.

அதற்கு பதிலடி தரும் வகையில் மேதினிபூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சுவேந்து அதிகாரி பேசியதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் 50 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டது என்றால் மேற்கு வங்கத்தில் இதே நடவடிக்கையின்கீழ் 1.25 கோடி பெயா்கள் நீக்கப்படும். இவா்கள் அனைவரும் சட்டவிரோதமாக வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து குடியேறியவா்களாவா். இவா்கள் கண்டிப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவாா்கள். இருப்பினும், மேற்கூறிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்குப் புலம்பெயா்ந்த ஹிந்துக்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் பாதிப்பு ஏற்படாது.

இந்த முறை முதல்வரை யாராலும் காப்பாற்ற முடியாது. அவரது ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளும்போது ஆளும் அரசுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.

வகுப்புவாதத்தை தூண்டும் கருத்து: திரிணமூல்

சுவேந்து அதிகாரியின் கருத்து வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் தேபாங்ஷு பட்டாச்சாா்யா தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘1.25 கோடி போ் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழைந்ததாக சுவேந்து அதிகாரி கூறுகிறாா். இது உண்மை என்றால் அவா்களின் பெயா்களை அரசுக்கு சமா்ப்பிக்கட்டும்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு (ஆா்ஜேடி) வாக்களிப்பவா்களின் பெயா்களை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது.

இதைப்போல மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பவா்களின் பெயா்களை நீக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் வங்காள மொழி ஒருங்கிணைக்கிறது. இங்கு பாஜகவின் சூழ்ச்சிகள் வெற்றியடையாது’ என்றாா்.

‘வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி தொடக்கம்’

மேற்கு வங்கத்தின் நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பா்கானாக்கள், முா்ஷிதாபாத் உள்பட 5 மாவட்டங்களில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலா்கள் மற்றும் துணை வாக்காளா் பதிவு அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை பயிற்சி வழங்கியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இது வழக்கமாக தோ்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி என அம்மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) மனோஜ் அகா்வால் தெரிவித்தாா்.