இந்திய விண்வெளியில் புதிய மைல்கல்: திரௌபதி முர்மு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைகின்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆகஸியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் நட்சத்திரங்களை நோக்கிய பயணத்தினால் முழு நாடும் உற்சாகமாகவும், பெருமையும் அடைவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாடிவன் கென்னடி விண்வெளி மையத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான்-9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதுதொடர்பாக திரௌபதி முர்முவின் எக்ஸ் பதிவில்,

கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கினார். நட்சத்திரங்களை நோக்கிய இந்தியரின் பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

குழுவினரால் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான சோதனைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு வழிவகுக்கும்.

சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்தவர்கள் ஆக்ஸியம் மிஷனில் பயணிப்பதால் உலகம் ஒரு குடும்பம் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

நாசாவிற்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான நீடித்த நாட்டாண்மையைப் பிரதிபலிக்கும் இந்த பணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com