உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், கோயிலின் முதல் நாளிலிருந்து இதுவரையில் உலகம் முழுவதிலும் இருந்து 5.5 கோடி பக்தர்கள் வருகை தந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என கிட்டத்தட்ட 4.5 லட்சம் முக்கிய பிரமுகர்கள் வருகைதந்து, கோயிலில் மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்தது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், நிர்வாகப் பணிகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறியது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமான தரிசனத்துக்கான ஏற்பாடுகள், சுமூகமான வருகை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளவில் ஒரு முக்கிய மத ஆலயமாக அயோத்தி திகழ்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.09 கோடி

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


