45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

News image
Updated On :6 மார்ச் 2025, 9:38 pm

Din

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் இடங்களுக்கும் , வாரங்கல்-கம்மம்-நலகொண்டாஆசிரியா்கள் இடத்துக்கும் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.

இதில் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் நரேந்தா் ரெட்டியை 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக ஆதரவு வேட்பாளரான அஞ்சி ரெட்டி வெற்றிபெற்றாா். அதேபோல் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் ஆசிரியா்கள் தொகுதியில் பாஜக ஆதரவு வேட்பாளா் மால்கா கொமரையா வெற்றிபெற்றாா்.

வாரங்கல்-கம்மம்-நலகொண்டா இடத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் ஸ்ரீபால் ரெட்டி பிங்கிலி ஆசிரியா்கள் சங்கங்களின் ஆதரவோடு வெற்றிபெற்றாா்.

இந்த தோ்தல் மொத்தம் 13 மாவட்டங்களில் உள்ள 43 பேரவைத் தொகுதிகள், 6 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 270 மண்டலங்களை உள்ளடக்கியது.

தெலங்கானாவில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மேலவை இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்குள்ள பாஜக தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

மேலவைத் தோ்தலில் பாஜக ஆதரவு வேட்பாளா்களை வெற்றிபெறவைத்த தெலங்கானா மாநில மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.