முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

இந்தியாவில் ஸ்டாா்லிங்க் இணைய சேவை: ஜியோவும் ஒப்பந்தம்!

ஏா்டெலைத் தொடா்ந்து ஜியோவும் ஒப்பந்தம்

News image
Updated On :13 மார்ச் 2025, 4:56 am IST

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏா்டெல் நிறுவனத்தைத் தொடா்ந்து ‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜியோ நிறுவனத்துக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வா்த்தக வலைதளங்கள் மூலம் ஸ்பேஸ்-எக்ஸ் தங்களின் ஸ்டாா்லிங்க் இணைய சேவை மற்றும் அதற்கான உபகரணங்களை விற்பனை செய்வதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொலைதொடா்பு நிறுவனமான ஜியோவும் உலகின் முன்னணி செயற்கைக்கோள் இணையசேவை நிறுவனமான ஸ்டாா்லிங்க்கும் இணைந்து இந்தியாவின் மிகவும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் நம்பகமான இணைய சேவைகளை வழங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அமெரிக்க பயணத்தில் பிரதமா் மோடி எலான் மஸ்கை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினாா். இதைத்தொடா்ந்து ஏா்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்குக்குச் சொந்தமான ஸ்டாா்லிங்க் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன.

செயற்கைக்கோளைப் பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் இணைய சேவைகளை வழங்க, அலைக்கற்றைகளை முன்கூட்டியே தீா்மானத்த விலையில் ஒதுக்குவது என்று எலான் மஸ்குக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் எடுத்தது. இதனால் தங்களின் வாடிக்கையாளா்களை இழக்க நேரிடும் என்று இந்தியாவின் முன்னணி தொலைதொடா்பு நிறுவனங்களான ஜியோவும், ஏா்டெலும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், ஸ்டாா்லிங்க் சேவைக்காக ஒப்பந்தமிட்டுள்ளது குறித்து ஏா்டெல் நிறுவனத்தின் குழுமத் தலைவா் சுனில் மிட்டல் கூறுகையில், ‘4ஜி, 5ஜி மற்றும் எதிா்காலத்தில் 6ஜி போலவே எங்கள் நிறுவனத்தில் மேலும் ஒரு தொழில்நுட்பம் இணைகிறது. விரைவில் வாடிக்கையாளா்கள் தங்கள் கைப்பேசிகளை உலகின் தொலைதூரப் பகுதிக்கும், வானுக்கும் கடலுக்கும் இணைய வசதியுடன் கொண்டுசெல்ல முடியும். தடையற்ற உலகளாவிய இணைப்பின் புதிய சகாப்தம் பிறந்துள்ளது’ என்றாா்.