பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் (48) விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும், மணப்பெண் தேர்வு நடந்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தகவல்கள் வரும் ஏப்ரல் இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகக் கூறுகிறது.
இதுநாள் வரை அரசியல் வெளிச்சம் படாமல் ஒதுங்கியிருந்து வந்த நிஷாந்த், விரைவில், அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரது திருமணம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தில்லியில், மிகப் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், மணப்பெண் அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிச்சயதார்த்தத்தில் ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதாகக் தெரிகிறது.
இதையும் படிக்க.. குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!
புது தில்லியில், அரசுத் துறையில் நிஷாந்த்தின் மணப்பெண் பணியாற்றி வருவதாகவும், நிதீஷ் குமாரின் அண்ணன் சதீஷ் குமார்தான், திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் முக்கிய நபர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 15ஆம் தேதி தலைநகர் தில்லியில் நிச்சயதார்த்தம் நடைபெறலாம் என்றும், ஹிந்து தர்மத்தில் கர்மாவின் காலம் என்று கூறப்படுவது ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவுபெறுவதால், அதற்கடுத்த நாள் திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நிஷாந்த்
கடந்த 1975ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பிறந்தவர் நிஷாந்த். அவருக்கு இப்போது 48 வயதாகிறது. பொறியியல் பட்டதாரியான இவர், அரசியலுக்குள் வராமல் இருந்து வந்தார். ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர்.
அண்மையில், தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு பிகார் மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார் நிஷாந்த். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வரலாம் என்றும் திருமணம் முடிந்ததும் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கூட சொல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள்

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுதானாம்!

மேலூா் ஊராட்சி ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



