விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி
விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம் என்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி
Published on

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையின்போது, அலைகள் போல பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்களும் ஆளில்லா சிறு போர் விமானங்களும் இந்திய எல்லையை நோக்கி வந்தன. அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படையால் முறியடிக்கப்பட்டதாக விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்றும், எங்களது வேலையை சரியாக முடித்துவிட்டோம், எங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நிறைவாக செய்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று (மே 12) செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடன் சேர்ந்து விளக்கமளித்தார்.

பாகிஸ்தானுக்கு, இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடி குறித்து விமானப் படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி விவரித்ததாவது, பாகிஸ்தான் விமானப்படையின் தாக்குதலை, இந்தியாவின் நவீன மற்றும் பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதை முறியடித்தோம். பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரேன்களையும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டோம். நவீன ரக ஆயுதங்களோடு, பாரம்பரிய ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையில் பயன்படுத்தி தாக்குதலை முறியடித்துள்ளோம்.

நமது வான் பாதுகாப்பு வலிமையான சுவர் போன்றது. அதை தகர்ப்பது எளிதல்ல. மத்திய அரசின் துணையால்தான் இந்த வலிமையை அடைந்தோம். மத்திய அரசு நிதி ரீதியாக, கொள்கை ரீதியாக பல வகைகளில் துணை நின்றது. மத்திய அரசின் துணையால் கடந்த 10 ஆண்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையடைந்தது.

பாகிஸ்தானின் விமானப்படை தளத்தை அடித்து வீழ்த்தினோம். அதனால் ஏற்பட்ட இழப்புகளின் விடியோக்களையும் பகிர்ந்துகொள்கிறோம் என்று அறிவித்தார்.

பாகிஸ்தானின் ரெய்னியார் விமான தளத்தில் இந்தியா தரப்பில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட சேதங்களின் விடியோக்களும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து பேசிய ஏ.கே. பாரதி, நமது தரப்பில் குறைவான இழப்புகளே ஏற்பட்டன. இந்த சண்டையை முந்தைய சண்டையோடு ஒப்பிட முடியாது, ஒவ்வொரு மோதலும் தனித்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எத்தனை போர் விமானங்கள் இந்தியா தரப்பில் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியாளர் கேள்விக்கு, பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியாது என்று பதிலளித்தார் ஏ.கே. பாரதி.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com