தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2025, 7:37 pm IST

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் லஷ்கர் பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் சுக்ரு கெல்லர் பகுதியில் நேற்று (மே 13) சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதியான ஷாஹித் குட்டே மற்றும் வந்துனா மெஹுரா பகுதியைச் சேர்ந்த அத்னான் ஷாஃபி மற்றும் புல்வாமாவைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக் ஷேயிக் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பலியான லஷ்கர் தளபதி ஷாஹித் குட்டேவின் தவறுதலான வழிகாட்டல்களினால் ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் அவர்களது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பலியான மூன்று பயங்கரவாதிகளுக்கும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட மிகப் பெரியளவிலான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.