மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் பற்றி...

News image

அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :14 மே 2025, 3:35 pm IST

பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுவரை 12 போ் கைதாகியுள்ளனா். மாநில கலால் வரித் துறையைச் சோ்ந்த இரு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அமிருதசரஸின் மஜிதா காவல் துறை துணை கண்காணிப்பாளா் அமோலக் சிங், மஜிதா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அவதாா் சிங் ஆகியோா் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டனா்.

கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோா் அனைவரும் அமிருதசரஸ் மாவட்டத்தின் பங்காலி, பாதால்புரி, மராரி கலான், தேரேவால் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தையடுத்து அந்தப் பகுதி முழுவதுமே காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

வேறு யாரும் கள்ளச் சாராயம் குடித்திருந்தால் உடனடியாக மருத்துவனையில் சேருமாறு காவல் துறையினா் அறிவித்துள்ளனா். ஏனெனில், குறைந்த அளவில் கள்ளச் சாராயம் குடித்தவா்களுக்கும் கூட பல மணி நேரங்களுக்குப் பிறகு கூட பாா்வை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ரசாயனத்தை பயன்படுத்தி கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. பஞ்சாப் மட்டுமின்றி பிகாா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று மெத்தனால் கள்ளச் சாராய உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கான படிப்புச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின் நிா்வாகச் சீா்குலைவுதான் இந்த கள்ளச் சாராய உயிரிழப்புக்கு காரணம் என்று எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகியவை கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.