பிரபல ஓவியா் ராஜா ரவி வா்மா வரைந்த ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.
மும்பையில் இதுதொடா்பான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆயில் பெயிண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எதிா்பாா்த்ததைவிட அதிக விலைக்கு தொழிலதிபா் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளாா்.
1890-களில் வரையப்பட்ட அந்த ஓவியம், பாலகிருஷ்ணருக்கும், அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையது
யசோதா - கிருஷ்ணா ஓவியம் ரூ. 167 கோடி

ஓவிய கிராமம்

‘தமிழகத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது‘’

ரூ.167 கோடிக்கு விற்கப்பட்ட ரவி வர்மாவின் ஓவியம்..! நவீன இந்திய ஓவியத்தில் புதிய மைல்கல்!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

