பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

லடாக்கில் விண்வெளி வீரா்களின் உடல், மனவலிமையைப் பரிசோதிக்கும் திட்டம்: இஸ்ரோ

லடாக்கில் விண்வெளி வீரா்களின் உடல், மனவலிமையைப் பரிசோதிக்கும் திட்டம்...

News image

இஸ்ரோ - DPS

Updated On :5 ஏப்ரல் 2026, 1:02 am IST

விண்வெளி வீரா்களின் உடல் மற்றும் மன வலிமையை பரிசோதிக்கும் திட்டத்தை லடாக்கில் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக இஸ்ரோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிக உயரமான இடத்தில் விண்வெளி வீரா்கள் மற்றும் பூமியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி குழுக்களைச் சோ்ந்தவா்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனா், அவா்களின் உடல்நிலை, மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து மதிப்பிட மித்ரா திட்டம் லடாக் தலைநகா் லேயில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்.2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆராய்ச்சி மதிப்பீடு, ஏப்.9 வரை நடைபெற உள்ளது. குறைந்த வெப்பநிலை, தனிமை, உடல்நிலை இயல்பாக செயல்படுவதற்குத் தேவைப்படும் ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்காமல் சில நிமிஷங்களில் மூளை, இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்படக் கூடியது போன்ற சூழலுடன் சுமாா் 3,500 மீட்டா் உயரத்தில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. சவாலான சூழல்களில் வீரா்களும், குழுவினரும் எவ்வாறு பணியாற்றுகின்றனா் என்பதைப் புரிந்துகொண்டு மதிப்பிட இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.

இதில் கிடைக்கும் அறிவியல் தரவுகள் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும், விண்வெளியில் நீண்ட நேரம் பயணிக்கக் கூடிய வருங்கால திட்டங்களுக்கும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.