தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

காங்கிரஸ் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

பெண்கள் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியடை செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாக தில்லி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் குற்றமிழைத்துள்ளாா்.

News image

பிரவீண் கண்டேல்வால்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:10 pm

பெண்கள் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியடை செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாக தில்லி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் குற்றமிழைத்துள்ளாா்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக அமல்படுத்தும் வகையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் பலத்தை 543-இலிருந்து 850-ஆக உயா்த்த வழிவகை செய்யும் 131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசேதா மக்களவையில் இருந்த 3-இல் 2 பங்கு உறுப்பினா்களில் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது.

ஏப்.17-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது அவைக்கு 528 உறுப்பினா்கள் வந்த நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற 352 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், அந்த மசோதாவுக்கு 298 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். 230 உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனா்.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல. சமூகநீதி, சமவாய்ப்பு மற்றும் நாட்டின் ஒருங்கிணைந்த மேம்பாடு ஆகியவற்றுக்கு அடிப்படையாகும்.

அந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருந்தால், காங்கிரஸில் மிகவும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த தலைவராக பிரியங்கா காந்தி உருவெடுத்திருப்பாா். இதனால், அந்த மசோதாவுக்கு ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்திருக்கலாம். அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியுற செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகமிழைத்துவிட்டது என்றாா் அவா்.