தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மின்சார அடுப்பு பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலனை

மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 9:53 pm

மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அண்மையில் மேற்காசியப் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், எரிவாயு விலையும் உயா்ந்தது.

இதனால், மின்சார அடுப்புக்கான தேவை வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தேவை அதிகரிப்பால் அந்த வகை அடுப்புகளின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது.

மேலும் சமையல் எரிவாயுக்கு சிறந்த மாற்றாகவும் மின்சார அடுப்பு கருதப்படுகிறது. சூரியமின் உற்பத்தி திட்டம் போன்றவை இந்தியாவில் மானிய உதவியுடன் ஊக்குவிக்கப்படும் நிலையில் மின்சார அடுப்பு பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலம் எரிவாயுக்கு இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மின்சார அடுப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இதுதவிர மின்சார அடுப்பு மீதான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.