மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அண்மையில் மேற்காசியப் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், எரிவாயு விலையும் உயா்ந்தது.
இதனால், மின்சார அடுப்புக்கான தேவை வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தேவை அதிகரிப்பால் அந்த வகை அடுப்புகளின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது.
மேலும் சமையல் எரிவாயுக்கு சிறந்த மாற்றாகவும் மின்சார அடுப்பு கருதப்படுகிறது. சூரியமின் உற்பத்தி திட்டம் போன்றவை இந்தியாவில் மானிய உதவியுடன் ஊக்குவிக்கப்படும் நிலையில் மின்சார அடுப்பு பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலம் எரிவாயுக்கு இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மின்சார அடுப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதுதவிர மின்சார அடுப்பு மீதான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

மின்சார வாகனக் கொள்கையை 3 மாதத்திற்கு நீட்டித்த தில்லி அரசு

தொடரும் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு கைகொடுக்கும் சூரிய ஒளி மின்சாரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


