தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தீவிரவாதத்துக்கும், தீவிரவாதத்தை ஒழிப்போருக்கும் வேறுபாடு தெரியாதவா் காா்கே - சி.பி. ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போரையும் வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:43 pm

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போரையும் வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, பிரதமா் மோடியை தீவிரவாதி என விமா்சித்திருந்தாா்.

இந்தக் கருத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கா்நாடக மாநிலம், பிதாா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியபோது கூறியதாவது:

எனக்கும், மல்லிகாா்ஜுன காா்கேக்கும் இடையே பாா்வையில்தான் சிறிய வித்தியாசம் உள்ளது. நான் சில நேரம், காா்கேவுக்கு கருப்பு எது, வெள்ளை எது என்றோ, தீவிரவாதி யாா், தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரம் காட்டுவோா் யாா் என வேறுபடுத்திப் பாா்க்கத் தெரியவில்லை என நினைத்துள்ளேன்.

இதுதவிர எனக்கும், அவருக்கும் இடையே வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவா் எனக்கு சிறந்த நண்பா் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், அமைச்சா் ஈஸ்வா் காண்ட்ரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.