காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகளால், பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 500 மாணவர்களும் 21 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நைலயில், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பள்ளி வளாகம் முழுவதும் திடீரென காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் மிக வேகமாக பரவியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பள்ளி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதும் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெளியே சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவோருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், பள்ளிக்கு வெளியே கழிவுகள் கொட்டப்படுவதும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதாகவும் பள்ளி நிர்வாகம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
Summary
500 students and teachers affected by illness! Bengaluru school closed! Two cases of swine flu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி செல்ல சாலை வேண்டும்! ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

பருவகால மாறுதலால் காய்ச்சல் பாதிப்பு! பொதுமக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK




