FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!நேபாளத்தில் தமிழர்கள்: 4 அமைச்சர்கள் தில்லி செல்கின்றனர்!நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள்: ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் செல்ல முதல்வர் உத்தரவு!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ தகவல்!

நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்களைக் காணவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ தகவல்..

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:33 pm IST

நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்களை மாயமானதாக மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில், கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. பனிப் பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் திபெத்தில் நேரிட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 289 பேர் பலியானதாகவும் 1,500 பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 823 பேர் இன்னும் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியானதாகவும், 260 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 558 பேர் காணாமல் போனதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆனமிகச் சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் 288 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

திரிசூலி மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்களும் மாயமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜிலாங் நகரில் 4 பேரும், சாகா செல்லும் வழியில் உள்ள ஜுதுல்புக்கில் 30 பேரும், அருகில் சில இடங்களில் 60 முதல் 70 பேரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், “திபெத்தில் உள்ள சீன எல்லைப் பகுதியில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உதவி கோரியுள்ள நிலையில், அவர்களில் 95 பேர் தற்போது டார்செனில் உள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில் நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். மேலும், காத்மாண்டுவில் உள்ள இந்தியாவுக்கான நேபாள தூதருடன் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Flash floods triggered by a possible ice avalanche in Nepal and Tibet have killed 289 people so far and left nearly 1,500 missing, police said. India has confirmed that 288 of its nationals are missing in Nepal.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.