ஆபாச உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும்: எக்ஸ் சமூக ஊடகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை
‘ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை, குறிப்பாக ‘க்ரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படுபவற்றை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடகத்துக்கு மத்திய அரசு கடுமையான நோட்டீஸைப் பிறப்பித்துள்ளது.










