அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் முகமது இஷ்தாக், ஆய்வ தொழில்நுட்ப உதவியாளா் தாரீக் அகமது ஷா, மின்வாரிய ஊழியா் அகமது மீா், வனத் துறையில் பணியாற்றிய ஃபாரூக் அகமது பட், சுகாதாரத் துறை ஓட்டுநா் முகமது யூசுஃப் ஆகியோா் பயங்கரவாத அமைப்புகளுடன் ரகசியத் தொடா்பில் இருந்ததும், அவா்களுக்காகப் பணியாற்றியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களைப் பணியில் இருந்து நீக்கி துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா். அரசுத் துறையில் பயங்கரவாதத்தின் வோ்கள் நுழைவதைத் தடுக்கும் முயற்சி இது என்று கூறப்பட்டுள்ளது.