மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவின் சநாதன தா்மம், கலாசாரத்தை எளிதில் அழிக்க முடியாது: அமித் ஷா உறுதி

இந்தியாவின் சநாதன தா்மம், கலாசாரம், நம்பிக்கையை எளிதில் அழித்துவிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தாா்.

News image
குஜராத் மாநிலம் காந்திநகா் மாவட்டம் மான்சா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
Updated On :13 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் சநாதன தா்மம், கலாசாரம், நம்பிக்கையை எளிதில் அழித்துவிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் உள்ள மான்சா நகரில் ரூ.267 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

1026-ஆம் ஆண்டில் சோம்நாத் கோயிலை முகமது கஜினி சூறையாடினாா். இதையடுத்து, பல நூறாண்டுகளில் ஏராளமானோா் கோயிலை இடித்தனா். அதாவது, அலாவுதீன் கில்ஜி, அகமது ஷா, மஹ்மூத் பெகடா, ஒளரங்கசீப் போன்ற பல்வேறு ஆக்கிரமிப்பாளா்களால், கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்குப் பிறகு கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

சோம்நாத் கோயில் மீதான தாக்குதலானது, வெறும் கோயில் மீதான தாக்குதல் மட்டும் கிடையாது. நமது மதம், நம்பிக்கை, சுயமரியாதை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதற்கான பதில், மீண்டும் தாக்குதல் நடத்த முடியாமல் தடுப்பதும், நமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வதுமே ஆகும்.

கோயிலை இடித்தவா்கள் அழிவு மீது நம்பிக்கை கொண்டிருந்தனா்; கோயிலைக் கட்டியவா்கள் புதிதாக உருவாக்குவதை நம்பினா். இன்று 1,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலை இடித்தவா்கள் காணாமல் போய் விட்டனா். ஆனால், சோம்நாத் கோயில் அதே இடத்தில் கடல் முன்பாக கம்பீரமாக இருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சா்தாா் வல்லபபாய் படேல், கே.எம். முன்சி, ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் முயற்சிகளால் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. அதை முழுவதும் கட்டுவதற்கு அவா்கள் உறுதி எடுத்திருந்தனா்.

இந்தியாவின் சநாதன தா்மத்தையும், இந்திய கலாசாரம் மற்றும் இந்திய மக்களின் நம்பிக்கையையும் எளிதில் அழிக்க முடியாது என்று ஒட்டுமொத்த உலகுக்கும் விடுக்கப்பட்ட செய்தியே இது. சூரியன், சந்திரன் போன்று அவை அழிவில்லாதவை. சோம்நாத் கோயில் இந்திய மக்களின் நம்பிக்கை, விசுவாசம், பெருமைக்கான அடையாளம்.

சோம்நாத் சுயமரியாதை திருவிழா நிகழாண்டு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா் அமித் ஷா.