அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் பொலிவுறு நகரம்! ராகுல் விமர்சனம்

சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் மாதிரி பொலிவுறு நகரமா என்று மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி எழுப்பினார்.

News image
இந்தூரில் ராகுல் காந்தி- ANI
Updated On :17 ஜனவரி 2026, 9:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம், ஒரு புதிய மாதிரி பொலிவுறு நகரம் என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் மாதிரி பொலிவுறு நகரமா? என மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சனிக்கிழமை காலை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வந்து, மாசடைந்த குடிநீரால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 20 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று பாம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேரை நேரில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பகீரதபுரா பகுதிக்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மாசடைந்த குடிநீரால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். ஏராளமானோர் பலியாகியிருக்கிறார்கள். பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசு, நாட்டில் பொலிவுறு நகரங்களை உருவாக்குவதாக உறுதி அளிக்கிறது. ஆனால், இந்த புதிய பொலிவுறு நகரத்தில், மக்கள் குடிக்கக் கூட சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை. மாசடைந்த குடிநீரைக் குடித்து மக்கள் பலியாகிறார்கள். ஆனால், மத்திய அரசு பொலிவுறு நகரத்தின் மாதிரி இந்த நகரம் என்று கூறுகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இன்றைய நாளில் கூட, இங்கு சுத்தமான குடிநீர் என்பது கிடைக்கவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக, அவர்களது குரலை எதிரொலிக்கிறேன். இது எனது பொறுப்பு, கடமை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் துணை நிற்கிறேன் என்று கூறினார்.

இந்தூர் நகரம் சுத்தமான குடிநீர் கூட இல்லாத ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் சிட்டி என்று கூறி, மத்திய அரசை கடுமையாக சாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.