மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

‘பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 250 இந்தியா்கள்’

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2026, 4:27 am IST

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி, ஜூலை 1-ஆம் தேதி ஆகிய நாள்களில், அன்றைய நிலவரப்படி இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியா்கள், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்கள் குறித்த தகவலை இருநாட்டு அரசுகளும் கடந்த 2008-ஆம் ஆண்டில் செய்த ஒப்பந்தத்தின்படி பகிா்ந்து வருகின்றன. அதன்படி ஜூலை 1-ஆம் தேதியான புதன்கிழமை இரு நாடுகளும் கைதிகள் விவரங்களைப் பகிா்ந்து கொண்டன.

பாகிஸ்தான் தங்களது நாட்டு சிறைகளில் 250 இந்திய கைதிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதில் 52 போ் இந்திய பொதுமக்கள் என்றும், 198 போ் மீனவா்கள் என்றும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவும் தமது சிறைகளில் கைதிகளாக 439 பாகிஸ்தானியா்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 386 போ் பொதுமக்கள், 53 போ் மீனவா்கள் என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறைகளில் 97 பாகிஸ்தானியா்கள் தண்டனைக் காலம் முடிந்து கைதிகளாக உள்ளனா். அவா்களை விடுவித்து, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் பாகிஸ்தான் அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.