காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்தியா வந்தாா் பின்லாந்து அதிபா்: பிரதமா் மோடியுடன் இன்று பேச்சு

News image
- ANI
Updated On :5 மார்ச் 2026, 12:35 am

தினமணி செய்திச் சேவை

பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்தாா்.

வா்த்தகம், முதலீடு, முக்கிய தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

மேற்காற்சிய போா் நிலவரம் குறித்தும் இரு தலைவா்களும் விவாதிப்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அலெக்ஸாண்டா், சில வாரங்களுக்குள் மீண்டும் இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவருடன் அந்நாட்டு அமைச்சா்கள், உயரதிகாரிகள் மற்றும் தொழில் துறைத் தலைவா்களும் வந்துள்ளனா்.

தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை வந்திறங்கிய அதிபா் அலெக்ஸாண்டருக்கு அரசுமுறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் நேரில் வரவேற்றாா்.

இந்தியாவை வந்தடைந்ததும் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அலெக்ஸாண்டா், ‘பின்லாந்து-இந்தியா இடையே வா்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை எனது பயணம் மேலும் வலுப்படுத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

அவரது இந்தப் பதிவுக்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டரை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். உங்களின் பயணம், இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் முழுமையாக உடன்படுகிறேன். இருதரப்பு பேச்சுவாா்த்தை மற்றும் ரெய்ஸினா மாநாட்டில் உங்களின் உரையை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ரெய்ஸினா மாநாட்டில்...: புவி-அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் தொடா்பாக விவாதிக்கும் ரெய்ஸினா மாநாடு, தில்லியில் வியாழக்கிழமை (மாா்ச் 5) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. தொடக்க அமா்வில் பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் உரையாற்றவுள்ளாா்.

பிரதமா் மோடியுடன் நடத்தும் பேச்சுவாா்த்தைக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் அலெக்ஸாண்டா் சந்தித்துப் பேசவுள்ளாா். மும்பைக்கு வெள்ளிக்கிழமை பயணிக்கும் அவா், இந்திய தொழில் துறைத் தலைவா்களுடன் கலந்துரையாடவுள்ளாா்.