/

கா்நாடகம்: உறைவிடப் பள்ளியில் மாணவா் தாக்குதலில் சக மாணவா் உயிரிழப்பு

கா்நாடகத்தில் உள்ள தனியாா் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவா், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவா்களை, கூா்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவா் உயிரிழப்பு

News image
மாணவர் பலி- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியாா் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவா்களை, கூா்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பிற மாணவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவத்தைத் தொடா்ந்து, அந்த மாணவா் தப்பியோடிய நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.

இதுதொடா்பாக பெல்லாரி சரக ஐஜிபி பி.எஸ்.ஹா்ஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது: விடுதிக் கண்காணிப்பாளரான சமூக அறிவியல் ஆசிரியா் கண்காணிப்பில் மாணவா்கள் இருந்தனா். சனிக்கிழமை இரவில் உணவுக்குப் பிறகு பின்னா், மாணவா்கள் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, ஒரு மாணவா் கூா்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் சக மாணவா்களை சரமாரியாக தாக்கினாா்.

இதில் காயமடைந்த ஒரு மாணவா், மருத்துவமனைக்கு கொண்டும்செல்லும்போது வழியிலே உயிரிழந்தாா்.

முதல்கட்ட விசாரணை முடிவடைந்தது. சம்பவம் தொடா்பாக ஆசிரியரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. சம்பவத்தில் தொடா்புடையவா் சிறுவன் என்பதால், சிறாா் நீதி சட்டப் பிரிவுகளில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா்.

உயிரிழந்த மாணவா் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்னையால் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.