11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஏலத்தில் பங்கேற்க நிறுவனங்கள் ஆா்வம் காட்டாததால் மத்திய அரசு ரத்து செய்தது.
இதுதொடா்பாக மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘5 கனிம வள பகுதிகளை ஏலத்தில் எடுப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும் 5 பகுதிகளுக்கு மூன்றுக்கும் குறைவான நிறுவனங்களே ஏல விண்ணப்பத்தை சமா்ப்பித்தன. எனவே, 10 கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுகிறது. இத்துடன் மேற்கு வங்கத்தில் உள்ள பேகுவில் அரிய கனிம வள பகுதிக்கான ஏலமும் ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஆந்திரம், சத்தீஸ்கா், கா்நாடகம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 23 கனிம வள பகுதிகளுக்கான 6-ஆம் சுற்று ஏல நடைமுறையை சுரங்க அமைச்சகம் தொடங்கியது.
இந்தப் பகுதிகளில் லித்தியம், கோபால்ட், அரிய கனிமங்கள், நியோபியம், டான்டலம், வனேடியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன.
முன்னதாக, 46 கனிம வள பகுதிகளுக்கான ஏல நடைமுறை நிறைவடைந்தது. முந்தைய சுற்றுகளிலும் பல்வேறு கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்புடையது

நெல்லுக்கான விதை மானியம் ரத்து! விவசாயிகள் ஏமாற்றம்

நேபாளம்- ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு

நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வா் விஜய்

இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு நீதிமன்றங்கள், அரசமைப்பு சட்டம் முக்கிய பங்கு: அமித் ஷா பெருமிதம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



