பரத்வாஜ் கைது... அவசர விசாரணைக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து...

தில்லி உயர்நீதிமன்றம் - IANS
இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்க தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
தில்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் ஆர்வலர் ஒருவரின் தந்தை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்துத்துவ ஆதரவாளர் சுவந்திர பரத்வாஜ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவர் மனுத் தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ்* காரியா ஆகியோர் அமர்வின் முன்பு ஆட்கொணர்வு மனு அவசர விசாரணைக்காகக் குறிப்பிடப்பட்டது. அதனை அன்றைய தினமே விசாரணைப் பட்டியலில் சேர்க்க நீதிபதிகள் அனுமதித்தனர்.
பரத்வாஜ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் உமேஷ் சர்மா இந்த விவகாரத்தை முன்வைத்து, சம்பந்தப்பட்ட நபர் கடந்த மூன்று நாள்களாகக் காவலில் உள்ளார். எனவே, இந்த ஆட்கொணர்வு மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோருகிறேன் என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, காணொலி காட்சி மூலம் பொறுப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பரத்வாத், இவ்வழக்கில் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
பரத்வாஜைக் கைது செய்யக்கோரி, கரப்பான் கட்சியினர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதையடுத்து செப். 4 அன்று புலந்த்ஷஹரில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







