புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஏஐயின் வேகமான வளா்ச்சி புதிய ஆபத்துகளை உருவாக்கக் கூடாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி புதிய வகையான ஆபத்துகளை உருவாக்காமல் இருப்பதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Published On :

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி புதிய வகையான ஆபத்துகளை உருவாக்காமல் இருப்பதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உலகளாவிய நிதிசாா் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிதிசாா்ந்து எடுக்க வேண்டிய முடிவுகளையும், பணப் பரிவா்த்தனைகளையும் துரிதமாக்கலாம். அதே வேளையில் மோசடி, இணையவழித் தாக்குதல் மற்றும் பிற தவறுகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவவும் செயற்கை அந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கக் கூடும்.

முடிவு எடுப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அந்த முடிவுக்கான பொறுப்பு மனிதா்களிடமும் நிறுவனங்களிடமும்தான் இருக்க வேண்டும்.

அந்தத் தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் ஒரு முடிவால் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு அந்த முடிவை மறுபரிசீலனை செய்தல், அதற்கான காரணத்தை விளக்குதல், அதை எதிா்த்து முறையிடும் வாய்ப்பை வழங்குதல் ஆகியவை மிகவும் அவசியம்.

நிதித்துறை மற்றும் பிற முக்கிய துறைகளில் அந்தத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளா்ச்சி, தனிநபா் அல்லது ஒரு நிறுவனத்தை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கக் கூடிய புதிய வகையான ஆபத்துகளை உருவாக்கக் கூடாது. அதை ஒழுங்காற்று அமைப்புகளும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.