
யுஜிசி நெட் தோ்வு 2026: மறுதேர்வு பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு
யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 2026 மறுதேர்தேர்வின் 3 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியானது குறித்து...

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்
புது தில்லி: யுஜிசி-நெட் தேர்வு ஜூன் 2026 ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை தொடர்ந்து, மேற்கண்ட மூன்று பாடங்களுக்கான மறுதேர்வை என்டிஏ அறிவித்தது.
அதன்படி, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் செப்.9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்.10 ஆம் தேதியும் நடைபெற்றன.
இந்த நிலையில், மறுதேர்வு நடைபெற்ற ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தேர்வர்கள் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகளை அதிகாரப்பூர்வ யுஜிசி-நெட் இணையதளம் வழியாக ஆன்லைனில் செப்.13 தேதி வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஆவணச் சான்றுகளைத் தேர்வர்கள் இணைக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை தொடா்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.
Summary
NTA has released provisional answer keys for the retest of English, Commerce and Sociology papers of UGC NET June 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




