சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

6. தாயும் குட்டியும்..

குட்டிகளைக் கவ்வும் தாயின் கொடிய பற்களால், குட்டிகள் ஒருபோதும் சேதாரமடைவதில்லை.

News image
Updated On :1 மே 2019, 10:00 am IST

மிகவும் பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டிய பணி ஒன்றினை சிஷ்யனுக்குக் கொடுத்திருந்தார் குருநாதர். தான் வெளியே சென்று வருவதாகவும், அதற்குள் அந்தப் பணியை முடித்து வைக்குமாறும் அறிவுறுத்தி இருந்தார்.

குரு, வெளியேறியதும் கடமையில் கண்ணானான் சிஷ்யன். என்னதான் ஆனாலும் சின்னப்பையன், சின்னப்பையன்தானே! ஆசிரமத்தின் ஜன்னலில் வந்து உட்கார்ந்த அழகான பறவையின் வனப்புக்கு சட்டென மயங்கினான் அவன்.

அருகே சென்றான். அந்தப் பறவை அவனைக் கண்டு துணுக்குற்று, பறந்தோடியது. திரும்ப வந்து பணியைத் தொடர்ந்தான் சிஷ்யன். திரும்பவும் வந்து ஜன்னலில் உட்கார்ந்துகொண்டு அழகு காட்டியது அந்தப் பறவை.

அவன் நெருங்க.. அது பறக்க.. அவன் திரும்ப.. அது மறுபடியும் வந்தமற.. இப்படியே விளையாட்டில் கழிந்தன சில பொழுதுகள். வேலையை முடித்தபாடில்லை. குரு ஆசிரமத்துக்குத் திரும்பி விட்டார்.

கொடுத்த பணியை முடிக்காமல் இருந்த சிஷ்யன் மீது குருவுக்குக் கோபம் வந்தது. சற்றுக் கடுமையான வார்த்தைகளால் அவனைக் கடிந்து கொண்டார்.

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் சிஷ்யன். அதன்பின்னர் குருவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை அவன். தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கி, ஒரு மூலையிலேயே இருந்தான்.

நெடு நேரமாகியும் அவன் சகஜ நிலைக்குத் திரும்பாததைக் குறிப்பால் அறிந்தார் குரு. அவனை அருகில் அழைத்தார். குனிந்த தலையை நிமிர்த்தாமல் அருகே வந்து நின்றான் சிஷ்யன்.

"சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு பிற உயிர்களைக் குடிக்கும் அளவுக்கு கொடிய பற்கள் உண்டு. ஆனால், அவை இரையைக் கவ்விக் கொலை செய்யும் அதே பற்களால்தான் தன் குட்டிகளின் கழுத்தைக் கடித்துத் தூக்கிச் செல்லும். குட்டிகளைக் கவ்வும் தாயின் கொடிய பற்களால், குட்டிகள் ஒருபோதும் சேதாரமடைவதில்லை. இந்த உலக நியதி உனக்குப் புரியுமானால், நான் உன்னைக் கடிந்து கொண்டதனால் ஏற்பட்ட வருத்தம் உன் மனதிலிருந்து மறையும்" என்றார் குரு.

கோழி மிதித்துக் குஞ்சுகள் சாவதில்லை என்ற உண்மையும் கூடுதலாகப் புரிந்தது சிஷ்யனுக்கு.

தாயுமானவனாகத் தெரிந்த குருவின் பாதங்களில் விழப் போனான். அவனைத் தடுத்து, அணைத்துக் கொண்டார் குருநாதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.