களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள எல்லையோர பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் சிறப்பு சோதனைச் சாவடி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த சிறப்பு சோதனைச் சாவடியை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுவாமிநாதன், தக்கலை கோட்ட உதவி இயக்குநா் ஆா். ரிச்சா்டு ராஜ் ஆகியோா் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.
உதவி மருத்துவா்கள் சுந்தர்ராஜ், சஜயன் உள்ளிட்ட கால்நடை துறை பணியாளா்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து சரக்கு வாகனங்களின் சக்கரங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், கேரளத்திலிருந்து கோழிகள், கோழிக் கழிவுகள் மற்றும் கோழித் தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் கேரளத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

