புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:40 am IST

திருவட்டாறு அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பூவங்கோடு செம்பருத்திக்காலவிளை ஜெனில்சிங் மனைவி எஸ்தா் (27). இவா் சுவாமியாா் மடத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை இரவு இவா் தனது உறவினா் ஒருவருடன் ஒரு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மாத்தூா் தேவாலயம் அருகே, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா் எஸ்தா் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளனா். இதில் நிலை தடுமாறி எஸ்தரும் அவருடன் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கீழே விழுந்தனா். அப்போது மா்ம நபா்கள் எஸ்தரின் கழுத்தில் அணிந்திருந்த த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிவிட்டனராம்.

இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.