9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சிரி... சிரி...

அரிசியில் தானே பெயர் எழுதித் தருவாங்க... அவர் என்ன கோதுமையில் எழுதித் தர்றாரு?

Updated On :19 ஜூலை 2026, 12:00 am IST

'அரிசியில் தானே பெயர் எழுதித் தருவாங்க... அவர் என்ன கோதுமையில் எழுதித் தர்றாரு?'

'அவர் சுகர் ஸ்பெஷலிஸ்ட் ஓவியராம்!'

-எம்.பி. தினேஷ், கோவை - 25.



'அந்தப் படம் படு போர் . இருந்தாலும் எல்லோரும் கடைசிவரை படத்தைப் பார்த்தாங்களா... எப்படி?'

'படம் ஆரம்பிச்சதும் வெளிக்கதவை இழுத்துப் பூட்டிடுறாங்களாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'கோழிக் கூவும்போது என்னை எழுப்பச் சொன்னனே... ஏன் எழுப்பலை?'

'அந்தக் கோழியை உங்கப்பா நடுராத்திரியில அடிச்சுக் குழம்பு வச்சிட்டாரே!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.



'தலைவர் எதுக்கு ஜிம்முக்குப் போய் உடம்பைக் குறைக்கிறார்?'

'தலைவர் ரொம்ப குண்டா இருக்கிறதால அவரால கட்சித் தாவ முடியலையாம்!'



'டைலர் அந்தப் பொம்பளையோட துணியை வாங்கி வைச்சுக்கிட்டு ரொம்ப நாளா தைக்காம இருக்காரு...'

'அதான், அந்தப் பொம்பளை கடைக்கு வந்து 'தை தை'ன்னு குதிக்கிறாங்களா?'

-தீபிகா சாரதி, சென்னை -5



'வம்புக்கினியாள்.'

'யாரது?'

'நம்ம வேலைக்காரம்மாதான்.'



'மருமகள் கிச்சனுக்குள் ஓடினா உனக்கு என்ன பயம்?'

'ஆயுதக் கிடங்கு அங்கே தானே இருக்கு!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்...'

'அப்ப சுகர் பேஷண்டுக்கு நல்லதுன்னு சொல்லுங்க!'



'உங்களுக்கு கல்யாணமானால் பொறுப்பு தானாக வந்துவிடும்.'

'வாஸ்தவம்தான்... இப்போதுதான் ரேஷன் கடையில் பருப்பு வாங்கி வந்தேன்.'



'மாப்பிள்ளை கல்யாண மண்டபத்தில் சிலம்பாட்டம் ஆடிக்காட்டுகிறாரே?'

'இன்று ஒரு நாள் தானே ஆடிவிட்டுப் போகட்டும். நாளையில் இருந்து என் மகள் ஆட்டத்தைப் பார்!'



'ஏண்டி... ஹாஸ்டலில் தங்கிப் படித்த பையனைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றே?'

'அவங்கதான் நாம் என்ன செஞ்சுப் போட்டாலும் ஒண்ணும் சொல்லாமச் சாப்பிடுவாங்க!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'குடிச்சிட்டுப்போனா என் மனைவி எப்படியாவது கண்டுபிடிச்சிடுறா!'

'நீதான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் 'தஸ்சு... புஸ்சு'ன்னு இங்கிலீஷ்ல ஏதாவது

உளறுவியே!'



'நண்பர்களோடு ஹோட்டலுக்குப் போனப்ப, சாப்பிடறதுக்கு முன்னாடியே சர்வர் கையில இருபது ரூபா வச்சு அழுத்தினீயே, ஏன்?'

'இல்லாட்டி பில்லை நம்ப கையில திணிச்சிட்டுப் போயிருப்பாரே!'



'உங்க மனைவியோட பெயரை 'சபாநாயகி'ன்னு சேவ் பண்ணியிருக்கீங்களா, ஏன் சார்?'

'அவங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கு, சார் !'



'இந்த டெக்னாலஜியிலயெல்லாம் எனக்கு நம்பிக்கையே போயிடிச்சுங்க!'

'இன்டர்நெட் மூலமா பொண்ணு தேடி கல்யாணம் பண்ணிக்கிட்டியில்ல... அப்படித்தான் இருக்கும்!'



'தலைவரோட பேச்சுல நல்ல முன்னேற்றம் தெரியுது, சார்!'

'எப்படிச் சொல்றீங்க?'

'முன்னாடில்லாம் அவர் பேசும்போது எல்லாரும் குறட்டைதான் விடுவாங்க; இப்ப கொட்டாவியோடு நிறுத்திக்கிறாங்களே!'



'அந்த நாட்டு டாக்டர் சரியான நக்கல் பேர்வழி...'

'எப்படிச் சொல்றீங்க?'

'மருந்தை நல்லா பொடிச்சு தேன்ல குழைச்சு நக்குங்கன்னு சொல்றாரே!'



'என் பையனுக்கு 25 வயசு ஆகுதே தவிர, யாரையும் மதிக்கவே மாட்டேங்கிறான், சார் ?'

'அவனுக்கு உடனே ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க... பொண்டாட்டியை மதிக்கிறானா, இல்லையான்னு பாருங்க!'



'இந்தக் கல்யாண ஜோடி ரொம்ப முற்போக்காம்...'

'அதுக்காக, பையன் கழுத்துல பொண்ணு தாலி கட்டுறதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க!'

- வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.