பின்னர் இரவு சற்று தாமதமாக வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து கதிரவன் தன் மனைவியிடம் ஏன் தாமதம் என்று கேட்டு தகராறு செய்து, குடிபோதையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சித்ரா தன் சித்தப்பாவிற்கு போன் செய்து, தன்னை கணவர் கண்டபடி அடிப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அச்சமடைந்த சித்ராவின் உறவினர்கள் உடனடியாக எம்.எம்.சி காலணி பகுதிக்கு வந்துள்ளனர். வீட்டில் வந்து பார்த்தபோது எரிந்த நிலையில் சித்ரா பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சித்ராவின் சித்தப்பா முருகன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்து விசாரிக்கையில், கதிரவன் குடிபோதையில் இருந்ததாகவும், மனைவி அடித்தபோது கீழே விழுந்து இறந்ததால் மண்ணெண்ணை ஊற்றி எரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.